மாற்றம் கொண்டு வந்தால் எதிர்ப்பு வருகிறது: பிரதமர் மோடி

டில்லியில் அசோசாமின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைவது என்பது கானல் நீரல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்றது. அதனை சரிவில் இருந்து மீட்டதோடு, பொருளாதாரத்தை நிலைபெற செய்துள்ளோம். தொழில்துறையினரின் பழங்கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். மாற்றங்களை கொண்டு வரும் போது, எதிர்ப்புகள் வருகிறது.