புன்செய்புளியம்பட்டி
தீபாவளியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தையில், ஆடுகளின் விற்பனை நேற்று களை கட்டியது. அதிகாலை முதலே மக்கள் குவிய துவங்கினர்.
10 கிலோ முதல், 12 கிலோ வரையிலான வெள்ளாடு, 5,300 ரூபாய் முதல், 6500 ரூபாய் வரை விற்பனையானது. ஐந்து முதல், 10 கிலோ செம்மறி ஆடு, 2,500 முதல், 5,500 ரூபாய் வரையும் விலை போனது. அனைத்து ஆடுகளும், 45 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஐப்பசி மாதம் துவங்கி உள்ளதால், சென்ற வாரத்தை விட இந்த வாரம், அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளதால், வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கிடா, 500 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இவ்வாறு கூறினார்.